Monday, May 30, 2011

முதல் கஞ்சா வழக்கு..

திமுக வின் திருச்சி மாவட்ட துணை செயலாளரும், திருவரங்கம் கோவில் அறங்காவலருமான குடமுருட்டி சேகர் இன்று கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (31.05.2011) இரவு காரில் சென்றுகொண்டிருந்தபோது, காவல்துறையினர் அவரது காரை மடக்கி விசாரணை செய்தனர். அவரின் காரையும் பரிசோதனை செய்ய வேண்டும் என்று காவல்துறையினர் கூறியதாகவும், அதற்கு சேகர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் போலீசார் காரை சோதனை செய்தனர். அப்போது காரில் கஞ்சா இருந்ததாகவும், போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் இரண்டு பிரிவின் கீழ் சேகர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர். மேலும் போலீசார் சேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீரங்கம் தேர்தல்ல அம்மாக்கு எதிரா ரொம்ப ஆடியிருப்பாரோ??

கடந்த அதிமுக ஆட்சியில் செரீனா , வளர்ப்பு மகன் உள்ளிட்டோர் மீதும் , எதிர்த்து பேசியவர்கள் வீடுகளிலும், கார்களிலும் திடிரென்று கஞ்சா செடி முளைத்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment