Friday, May 20, 2011

ஒரு நிமிட கதை

சுதா, பசங்க தூங்கிட்டாங்களா பாரு.. டீ வி யில் இருந்து கண் அகற்றாமல் மனைவியிடம் கேட்டார் சுந்தரம்.

இன்னும் இல்லைங்க.. பெரியவன் ஏதோ புத்தகம் படிக்கிறான், சின்னது கம்ப்யூட்டர் கேம் விளையாடிட்டு இருக்கு..

அய்யோ.. மனி 10 ஆகுது இன்னும் தூங்காம என்ன பன்னுதுங்க இதுங்க.... நம்ம அவசரம் இதுகளுக்கு எங்கே புரியுது.. அங்கலாய்த்துக்கொண்டார் சுந்தரம்.

சீக்கரம் தூங்கவைமா , மனைவியிடம் சிடுசிடுத்தார்…

என்னங்க தெரியாம தான் கேக்கறேன் , ஒரு நாளைக்கு கூட இது இல்லாம இருக்க முடியாதா உங்களுக்கு ?

அய்யோ சுதா, உனக்கே தெரியும்ல , இது இல்லாம எப்படிம்மா என்னால … ப்ளீஸ் ப்ளீஸ்.. கெஞ்ச ஆரம்பித்தார்..

சரி சரி இருங்க.. உள்ளே சென்ற சுதா, 15 நிமிடத்தில் குரல் கொடுத்தாள். ஏங்க, பசங்க தூங்கிட்டாங்க..

நிம்மதி பெருமூச்சு விட்டபடி சுந்தரம், தன் சட்டை பாக்கட்டை துழாவி சிகரெட்டும் , தீப்பெட்டியும் வெளியே எடுத்தார்..

அப்பப்பபா, பொது இடத்துல புகைப்பிடிக்க கூடாது அரசாங்கம் சட்டம் போட்டு… பசங்க முன்னாடி பிடிக்ககூடாதுனு வீடல பொன்டாட்டி சட்டம் போட்டு.. நம்மள இப்படி கஷ்டப்பட வெக்குறாங்கடா.. முடியல சாமி…

அலுத்துக்கொண்டே ஆனந்தமாய் புகையை இழுத்துவிட்டர் சுந்தரம்..


அன்புடன்
வேலவன்



பிடித்திருந்தால் ஒரு வரி கருத்து .. ஒரு ஒட்டு ப்ளீஸ்

2 comments:

hemamalini said...

Good one but a little outdated story.. !

வேலவன் said...

thanks for the comments and visit hema. yes, i agree.. it is actually a story written in 2009 where the ban on smoking was introduced...

Post a Comment