Sunday, May 22, 2011

தமிழக அமைச்சர் மரியம் பிச்சை விபத்தில் மரணம்

திருச்சி அருகே பாடாலூரில் இன்று காலை நடைபெற்ற சாலை விபத்தில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மரியம் பிச்சை ( வயது 60 ) மரணம் அடைந்தார். சட்டசபை உறுப்பினராக பதவி ஏற்க திருச்சியிலிருந்து சென்னைக்கு காரில் சென்றபோது இந்த பரிதாபம் நடைபெற்றது. பாடலூர் பிரிவு அருகே, முன்னால் சென்ற டிப்பர் லாரி மீது அமைச்சரின் கார் மோதியதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

விபத்தில் பலியான அமைச்சர் மரியம் பிச்சை, திருச்சி மேற்கு தொகுதியிலி்ல் முன்னாள் தி.மு.க., அமைச்சர் நேருவைத் தோற்கடித்தவர்.

பி.ஏ., வரலாறு பட்டதாரியான மரியம் பிச்சை திரைப்பட வினியோகஸ்தராக இருந்த மரியம் பிச்சை திரையரங்கையும் நடத்தி வந்தார். திருச்சி மாநகர அதிமுக அமைப்பு செயலாளராக இருந்து வந்தவர். திருச்சி 27வது வார்டு கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். மறைந்த மரியம் பிச்சைக்கு ஒரு மகள் மற்றும் 3 மகன்கள் உள்ளனர்.

ஒரு வாரத்துக்கு முன்பு தான் அமைச்சராக பதவியேற்ற மரியம் பிச்சை அவர்கள் எதிர்பாராவிதமாக அகால மரணம் அடைந்தது மிகுந்த துயரமான சம்பவம். அவரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

4 comments:

எனது கவிதைகள்... said...

அவரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

unmaivrumbi.
Mumbai

Unknown said...

அவரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

வாக்காளன் said...

மிகுந்த துயரமான சம்பவம். அவரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

Babu said...

கழக அமைச்சரின் இறப்பு கழகத்துக்கு மிக பெரிய இழப்பு.. அம்மா திருச்சி விரைந்துள்ளார்.

Post a Comment