Friday, May 13, 2011

2011 தேர்தல் - ஒட்டு மொத்த பதிவர்களும் அடைந்த படுதோல்வி

ஒட்டு மொத்தமாக பதிவர்கள் அனைவரும் யாரும் எதிர்பாராதபடி தோல்வி அடைந்து விட்டனர். நாளை எப்படி எல்லாம் பதிவு போடவேண்டும், எப்படி பட்ட படங்கள் தேவை என்று யோசித்து பதிவு போட தேவையான படங்களை எல்லாம் கூகுளாண்டவர் துணையுடன் தரவிறக்கி ரெடியாக வைத்தனர்.. அதிமுக வெற்றி பெற்றால் என்ன தலைப்பு போடுவது, தி மு க ஜெயித்தால் என்ன தலைப்பு. எந்த படம் பொருத்தமாக இருக்கும், மற்றவர் பதிவில் கமென்ட் என்ன போடாலாம்.. திமுக ஜெய்க்கும் என்று பதிவிட்ட பதிவர்களுக்கு என்ன பதிலடி கொடுக்கலாம் என்று அதிமுக பதிவர்களும், அதிமுக வெற்றி என்று பதிவிட்ட அதிமுக பதிவர்களுக்கு என்ன பதிலடி தரலாம் என திமுக பதிவர்களும் ..

அதிக ஹிட் அடிக்க சுட சுட ரிசல்ட் எப்படி கொடுக்கலாம் என்ற சிந்தனையோடே அனைத்து பதிவர்களும் மே 12 நள்ளிரவு வரை யோசித்து யோசித்து பாதி தூக்கம் தொலைத்துவிட்டு , பின்பு தான் உறங்க போனார்கள் ..

சில பதிவர்கள், தேர்தல் முடிவுகளை சுட சுட தருவதற்கென்றே வாடகைக்கு லேப்டாப் எடுத்ததும், தங்களின் கணினியை சர்வீசுக்கு கொடுத்ததும் நடந்ததாம்.

மே 13 இணையத்துக்கு வந்து ப்ளாகரை திறக்க முயற்சி செய்த போது வந்தது சோதனை.. பிளாக்கர் தளம் இயங்காது முடங்கி இருந்தது கண்டு பதிவர்கள் கதிகலங்கி தவித்து போனார்கள்.. சரி பதிவுதான் போட முடியவில்லை.. தமிழ்மணம் உள்ளிட்ட திரட்டிகளுக்கு போய் கருத்து பெட்டிகளை நிரப்பலாம் என்று பார்த்தால், ஒன்றிரண்டு பதிவுகள் தவிர்த்து திரட்டிகள் எல்லாம் ஏப்ரல் , மே பெண்கள் கல்லூரி சாலைகளை போல வெறிச்சோடி, களையிழந்து கிடந்தது .. அது பார்த்து , அடேங்கப்பா , எனக்கு மட்டும் பிரச்னை இல்லை.. எல்லா பயபுள்ளைக்கும் இதே அவஸ்தை தான் போல என்ற சின்ன திருப்தி மட்டுமே பதிவர்களுக்கு மிஞ்சியது..

இது தான் பிளாக்கர் கொடுத்த ஷாக்


மொத்தத்தில் ஐயா ஆட்சியில் மின்வெட்டு, அம்மா ஆட்சியின் துவக்கத்திலேயே "பதிவு வெட்டு" .
திருஷ்டி பரிகாரம் போல இந்த பதிவுவெட்டு. பதிவர்களே , கெட் ரெடி , போட்டுத்தாக்க வேண்டிய பதிவுகள் ஏராளம் வரும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் . ஜமாய்க்கலாம்

அன்புடன்
வேலவன்

5 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

எப்படியோ சரிஆயிடிச்சி
அதுவரைக்கும் சந்தோஷம்...

ஆனா அரசியல் பதிவர்களுக்கு சரியான ஷாக்தான்

வேலவன் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி # கவிதை வீதி # சௌந்தர்

//ஆனா அரசியல் பதிவர்களுக்கு சரியான ஷாக்தான் //
அனைவர்க்கும் ஷாக் என்று தான் நினைக்கறேன் சௌந்தர்

மதுரை சரவணன் said...

எப்படின்னே தோல்வியில இப்படியெல்லாம் உளர ஆரம்பிச்சிட்டீங்க... அரசியலை விட்டு நல்ல பதிவு போட்டு அசத்துங்க...

வேலவன் said...

எந்த தோல்விய சொல்றிங்க சரவணன் ? உளறல் இல்லைங்க உண்மைதான் இது . நேற்று நீங்க பிளாக்கர் பார்க்கலையா

ராஜேஷ், திருச்சி said...

நல்ல வேலைய கட் ஆச்சு.. இல்லேன்னா இந்த அதிமுக அம்மா அடிவருடி சொம்புகள் போட்ட ஆட்டம் தாங்கி இருக்காது

Post a Comment