திருச்சி அருகே பாடாலூரில் இன்று காலை நடைபெற்ற சாலை விபத்தில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மரியம் பிச்சை ( வயது 60 ) மரணம் அடைந்தார். சட்டசபை உறுப்பினராக பதவி ஏற்க திருச்சியிலிருந்து சென்னைக்கு காரில் சென்றபோது இந்த பரிதாபம் நடைபெற்றது. பாடலூர் பிரிவு அருகே, முன்னால் சென்ற டிப்பர் லாரி மீது அமைச்சரின் கார் மோதியதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
விபத்தில் பலியான அமைச்சர் மரியம் பிச்சை, திருச்சி மேற்கு தொகுதியிலி்ல் முன்னாள் தி.மு.க., அமைச்சர் நேருவைத் தோற்கடித்தவர்.
பி.ஏ., வரலாறு பட்டதாரியான மரியம் பிச்சை திரைப்பட வினியோகஸ்தராக இருந்த மரியம் பிச்சை திரையரங்கையும் நடத்தி வந்தார். திருச்சி மாநகர அதிமுக அமைப்பு செயலாளராக இருந்து வந்தவர். திருச்சி 27வது வார்டு கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். மறைந்த மரியம் பிச்சைக்கு ஒரு மகள் மற்றும் 3 மகன்கள் உள்ளனர்.
ஒரு வாரத்துக்கு முன்பு தான் அமைச்சராக பதவியேற்ற மரியம் பிச்சை அவர்கள் எதிர்பாராவிதமாக அகால மரணம் அடைந்தது மிகுந்த துயரமான சம்பவம். அவரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
மனதில் பட்ட கருத்துக்கள் இந்த பூங்காவில் பூத்துக்குலுங்கும்.. பூக்கள் பறிப்பதற்கு அல்ல :)
Sunday, May 22, 2011
Saturday, May 21, 2011
விடுகதை ௦புதிர் - லட்சம் பரிசு

இந்த புதிருக்கு சரியான விடை தெரியுமா? ?? தெரிந்தால் கருத்துப்பெட்டியில் சொல்லுங்கள்.. சரியான விடை சொல்பவர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் தரப்படும்...
அப்படியே ஒரு ஒட்டு போட்டு நெறைய பேருக்கு அந்த பணம் கிடைக்க வழி செய்யுங்கள்
Friday, May 20, 2011
ஒரு நிமிட கதை
சுதா, பசங்க தூங்கிட்டாங்களா பாரு.. டீ வி யில் இருந்து கண் அகற்றாமல் மனைவியிடம் கேட்டார் சுந்தரம்.
இன்னும் இல்லைங்க.. பெரியவன் ஏதோ புத்தகம் படிக்கிறான், சின்னது கம்ப்யூட்டர் கேம் விளையாடிட்டு இருக்கு..
அய்யோ.. மனி 10 ஆகுது இன்னும் தூங்காம என்ன பன்னுதுங்க இதுங்க.... நம்ம அவசரம் இதுகளுக்கு எங்கே புரியுது.. அங்கலாய்த்துக்கொண்டார் சுந்தரம்.
சீக்கரம் தூங்கவைமா , மனைவியிடம் சிடுசிடுத்தார்…
என்னங்க தெரியாம தான் கேக்கறேன் , ஒரு நாளைக்கு கூட இது இல்லாம இருக்க முடியாதா உங்களுக்கு ?
அய்யோ சுதா, உனக்கே தெரியும்ல , இது இல்லாம எப்படிம்மா என்னால … ப்ளீஸ் ப்ளீஸ்.. கெஞ்ச ஆரம்பித்தார்..
சரி சரி இருங்க.. உள்ளே சென்ற சுதா, 15 நிமிடத்தில் குரல் கொடுத்தாள். ஏங்க, பசங்க தூங்கிட்டாங்க..
நிம்மதி பெருமூச்சு விட்டபடி சுந்தரம், தன் சட்டை பாக்கட்டை துழாவி சிகரெட்டும் , தீப்பெட்டியும் வெளியே எடுத்தார்..
அப்பப்பபா, பொது இடத்துல புகைப்பிடிக்க கூடாது அரசாங்கம் சட்டம் போட்டு… பசங்க முன்னாடி பிடிக்ககூடாதுனு வீடல பொன்டாட்டி சட்டம் போட்டு.. நம்மள இப்படி கஷ்டப்பட வெக்குறாங்கடா.. முடியல சாமி…
அலுத்துக்கொண்டே ஆனந்தமாய் புகையை இழுத்துவிட்டர் சுந்தரம்..
அன்புடன்
வேலவன்
பிடித்திருந்தால் ஒரு வரி கருத்து .. ஒரு ஒட்டு ப்ளீஸ்
இன்னும் இல்லைங்க.. பெரியவன் ஏதோ புத்தகம் படிக்கிறான், சின்னது கம்ப்யூட்டர் கேம் விளையாடிட்டு இருக்கு..
அய்யோ.. மனி 10 ஆகுது இன்னும் தூங்காம என்ன பன்னுதுங்க இதுங்க.... நம்ம அவசரம் இதுகளுக்கு எங்கே புரியுது.. அங்கலாய்த்துக்கொண்டார் சுந்தரம்.
சீக்கரம் தூங்கவைமா , மனைவியிடம் சிடுசிடுத்தார்…
என்னங்க தெரியாம தான் கேக்கறேன் , ஒரு நாளைக்கு கூட இது இல்லாம இருக்க முடியாதா உங்களுக்கு ?
அய்யோ சுதா, உனக்கே தெரியும்ல , இது இல்லாம எப்படிம்மா என்னால … ப்ளீஸ் ப்ளீஸ்.. கெஞ்ச ஆரம்பித்தார்..
சரி சரி இருங்க.. உள்ளே சென்ற சுதா, 15 நிமிடத்தில் குரல் கொடுத்தாள். ஏங்க, பசங்க தூங்கிட்டாங்க..
நிம்மதி பெருமூச்சு விட்டபடி சுந்தரம், தன் சட்டை பாக்கட்டை துழாவி சிகரெட்டும் , தீப்பெட்டியும் வெளியே எடுத்தார்..
அப்பப்பபா, பொது இடத்துல புகைப்பிடிக்க கூடாது அரசாங்கம் சட்டம் போட்டு… பசங்க முன்னாடி பிடிக்ககூடாதுனு வீடல பொன்டாட்டி சட்டம் போட்டு.. நம்மள இப்படி கஷ்டப்பட வெக்குறாங்கடா.. முடியல சாமி…
அலுத்துக்கொண்டே ஆனந்தமாய் புகையை இழுத்துவிட்டர் சுந்தரம்..
அன்புடன்
வேலவன்
பிடித்திருந்தால் ஒரு வரி கருத்து .. ஒரு ஒட்டு ப்ளீஸ்
கனிமொழி கைது

கனிமொழி கைது.
அலைக்கற்றை வழக்கில் இன்று சி பி ஐ நீதிமன்றத்தில் ஆஜரான கனிமொழி ஜாமீன் மறுக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார்.
கனிமொழி உடனடியாக கைது செய்யப்பட வேண்டும், நாளை காலை 10 மணிக்கு மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தீர்ப்பின் படி கனிமொழி 15 நாட்கள் காவலில் வைக்கப்படுகிறார்.
கலைஞர் டி வி நிர்வாக இயக்குனர் சரத்குமாரும் கைது.
தேர்தலிலும் தோல்வி என்ற சூழலில், தி மு க என்ன வித முடிவு எடுக்கும்.. காங்கிரசுடன் உறவு என்னவாகும் என்பதே இப்போதைய பரபரப்பு..
Wednesday, May 18, 2011
ஜெ- கண்டணத்துடன் கழட்டிவிடப்பட்ட முதல் கூட்டணி கட்சி..
அம்மா தன் அதிரடியை ஆரம்பித்து விட்டார்..
30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரி சட்டசபை தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிட்டத்தில் என்.ஆர்.காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், அதிமுக 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. ஆட்சியமைக்க ௧௬ எம் எல் ஈக்கள் வேண்டும் என்ற நிலையில், சுயேட்சை வேட்பாளர் வி.எம்.சிவக்குமார் ஆதரவு அளித்ததால் தனித்து ஆட்சி அமைத்தார் ரங்கசாமி.
இதற்கு ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தனித்து ஆட்சியமைத்து கூட்டணிக்கு துரோகம் இழைத்துவிட்டார் என்றும் ஜெயலலிதா கண்டனம் தெரிவத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், புதுச்சேரியில் அதிமுக என் ஆர் காங்கிரஸ் கூட்டணி 30 இடங்களில் போட்டியிட்டது. இதில் 15 தெட்குதிகளில் என்ஆர் காங்கிரசும், 5 இடங்களில் அதிமுகவும் வெற்றி பெற்றது. இந்நிலையில், ஆட்சியில் தங்களை சேர்க்காமல், என்ஆர் காங்கிரஸ் கட்சி தனித்தே ஆட்சி அமைத்து, தங்களுக்கு துரோகம் இழைத்து விட்டது. தான் தமிழக முதல்வராக பதவியேற்றதற்கு அவர் இதுவரை வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை என்றும், புதுவையில், அதிமுக ஆக்கப்பூர்வ எதிர்க்கட்சியாக செயல்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முடிந்த கையேடு கூட்டணி கட்சிகளை கழட்டி விடுவது அம்மாக்கு புதிதில்லை என்பது அனைவரும் அறிந்தது.. அடுத்த தேமுதிகவா என்பதே இப்போதைய கேள்வி ..
முதலில் சட்டசபை மாற்றம், இப்போ கூட்டணி கட்சி கழட்டிவிடப்படுதல் .. அம்மா மாறிவிட்டார் என்று முழுமனதுடன் சொல்லமுடியவில்லை.
அம்மா மாறுவாரா ??? உங்கள் கருத்து என்ன ?
30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரி சட்டசபை தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிட்டத்தில் என்.ஆர்.காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், அதிமுக 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. ஆட்சியமைக்க ௧௬ எம் எல் ஈக்கள் வேண்டும் என்ற நிலையில், சுயேட்சை வேட்பாளர் வி.எம்.சிவக்குமார் ஆதரவு அளித்ததால் தனித்து ஆட்சி அமைத்தார் ரங்கசாமி.
இதற்கு ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தனித்து ஆட்சியமைத்து கூட்டணிக்கு துரோகம் இழைத்துவிட்டார் என்றும் ஜெயலலிதா கண்டனம் தெரிவத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், புதுச்சேரியில் அதிமுக என் ஆர் காங்கிரஸ் கூட்டணி 30 இடங்களில் போட்டியிட்டது. இதில் 15 தெட்குதிகளில் என்ஆர் காங்கிரசும், 5 இடங்களில் அதிமுகவும் வெற்றி பெற்றது. இந்நிலையில், ஆட்சியில் தங்களை சேர்க்காமல், என்ஆர் காங்கிரஸ் கட்சி தனித்தே ஆட்சி அமைத்து, தங்களுக்கு துரோகம் இழைத்து விட்டது. தான் தமிழக முதல்வராக பதவியேற்றதற்கு அவர் இதுவரை வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை என்றும், புதுவையில், அதிமுக ஆக்கப்பூர்வ எதிர்க்கட்சியாக செயல்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முடிந்த கையேடு கூட்டணி கட்சிகளை கழட்டி விடுவது அம்மாக்கு புதிதில்லை என்பது அனைவரும் அறிந்தது.. அடுத்த தேமுதிகவா என்பதே இப்போதைய கேள்வி ..
முதலில் சட்டசபை மாற்றம், இப்போ கூட்டணி கட்சி கழட்டிவிடப்படுதல் .. அம்மா மாறிவிட்டார் என்று முழுமனதுடன் சொல்லமுடியவில்லை.
அம்மா மாறுவாரா ??? உங்கள் கருத்து என்ன ?
Tuesday, May 17, 2011
ஆரம்பிச்சுட்டாங்கையா ஆரம்பிச்சுட்டாங்க

அம்மா அரசுக்கு எதிரா முதல் வழக்கு உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது.. பொதுநல வழக்கு போடுவதற்கென்றே சிலர் இருக்கின்றார்கள். அதில் முதன்மையானவர் திரு டிராபிக் ராமசாமி. பொதுமக்களை பாதிக்கும் எந்த பிரச்சனையானாலும் தைரியமாக நீதிமன்ற படியேறிவிடுவார் . பலமுறை சிக்கல்களில் சிக்கி கொண்டாலும், பொதுநல வழக்கு தொடருவதில் இருந்து மட்டும் அவர் பின்வாங்கவில்லை. இந்த முறை திருவாரூரில் சுயேட்சையாக போட்டியிட்டார்.. எவ்வளவு வாக்குகள் வாங்கினார் என்று தெரியவில்லை..
இப்போது அம்மா (அதிமுக) அரசுக்கு எதிராக முதல் பொது நல வழக்கு பதியப்பட்டுள்ளது.. இந்த முறை திரு டிராபிக் ராமசாமி அல்ல... வழக்கை பதிந்திருப்பவர் வக்கீல் திரு ஜி.கிருஷ்ணமூர்த்தி .
சட்டசபையை புதிய வளாகத்திலிருந்து (ஓமந்தூரார் தோட்டம் ) பழைய செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றும் அம்மாவின் செயலுக்கு தடை விதிக்க கோரி நீதிமன்ற கதவை தட்டியுள்ளார்..
இடவசதி குறைவு என்று காரணம் காட்டி கடந்த அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவே, வேறு இடங்களில் தலைமை செயலகம் / சட்டசபை கட்ட முடிவுசெய்தார். பின்பு வந்த அரசாங்கம் ஓமந்தூரார் தோட்டத்தில் பல ஆயிரம் செலவில் அனைத்து வசதிகளுடன் புதிய சட்டசபை கட்டியுள்ளது.. ஆனால் ஜெயலலிதா மீண்டும் சட்டசபையை செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலேயே நடத்த ஏற்பாடுகள் செய்வது சரியல்ல.. மேலும் செம்மொழி நூலகத்தை இடமாற்றம் செய்வதால் பல புத்தகங்கள் பாழாகிறது.. புதிய கட்டிடத்தை என்ன செய்ய போகின்றார்கள் என்றும் தெளிவில்லை. இது சட்ட விரோத, அங்கீகாரமற்ற , பொது நலனுக்கு எதிரான செயல்.
தலைமை செயலகத்தை இடமாற்றம் செய்வதற்காக இந்த தேர்தல் நடத்தப்படவில்லை. அதை இடமாற்றம் செய்வதுபற்றி தமிழக அரசு முடிவெடுக்கவில்லை. தலைமைச் செயலகத்தை இடமாற்றம் செய்வதற்கு யார் அதிகாரம் அளித்தது? என்பதை தலைமைச் செயலாளர், பொதுப்பணித்துறை செயலாளர் ஆகியோர் விளக்க வேண்டும்.
விதி 110 ன் கீழ் சட்டசபை மாற்றம் வேண்டும் என்று தீர்மானம் போட்ட ஜெயலலிதா தகுந்த காரணங்கள் சொல்லிவிட்டு , மீண்டும் சட்டசபை மாற்றம் செய்ய வேண்டும். அதுவரை சட்டசபை மாற்றத்தை தடை செய்ய வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்..
பார்க்கலாம் நீதிமன்றம் என்ன சொல்கிறதென்று.. அம்மா அரசின் மீதான முதல் வழக்கில் சாதகமான முடிவா, பாதகமான முடிவா என்று..
அன்புடன்
வேலவன்
இப்போது அம்மா (அதிமுக) அரசுக்கு எதிராக முதல் பொது நல வழக்கு பதியப்பட்டுள்ளது.. இந்த முறை திரு டிராபிக் ராமசாமி அல்ல... வழக்கை பதிந்திருப்பவர் வக்கீல் திரு ஜி.கிருஷ்ணமூர்த்தி .
சட்டசபையை புதிய வளாகத்திலிருந்து (ஓமந்தூரார் தோட்டம் ) பழைய செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றும் அம்மாவின் செயலுக்கு தடை விதிக்க கோரி நீதிமன்ற கதவை தட்டியுள்ளார்..
இடவசதி குறைவு என்று காரணம் காட்டி கடந்த அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவே, வேறு இடங்களில் தலைமை செயலகம் / சட்டசபை கட்ட முடிவுசெய்தார். பின்பு வந்த அரசாங்கம் ஓமந்தூரார் தோட்டத்தில் பல ஆயிரம் செலவில் அனைத்து வசதிகளுடன் புதிய சட்டசபை கட்டியுள்ளது.. ஆனால் ஜெயலலிதா மீண்டும் சட்டசபையை செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலேயே நடத்த ஏற்பாடுகள் செய்வது சரியல்ல.. மேலும் செம்மொழி நூலகத்தை இடமாற்றம் செய்வதால் பல புத்தகங்கள் பாழாகிறது.. புதிய கட்டிடத்தை என்ன செய்ய போகின்றார்கள் என்றும் தெளிவில்லை. இது சட்ட விரோத, அங்கீகாரமற்ற , பொது நலனுக்கு எதிரான செயல்.
தலைமை செயலகத்தை இடமாற்றம் செய்வதற்காக இந்த தேர்தல் நடத்தப்படவில்லை. அதை இடமாற்றம் செய்வதுபற்றி தமிழக அரசு முடிவெடுக்கவில்லை. தலைமைச் செயலகத்தை இடமாற்றம் செய்வதற்கு யார் அதிகாரம் அளித்தது? என்பதை தலைமைச் செயலாளர், பொதுப்பணித்துறை செயலாளர் ஆகியோர் விளக்க வேண்டும்.
விதி 110 ன் கீழ் சட்டசபை மாற்றம் வேண்டும் என்று தீர்மானம் போட்ட ஜெயலலிதா தகுந்த காரணங்கள் சொல்லிவிட்டு , மீண்டும் சட்டசபை மாற்றம் செய்ய வேண்டும். அதுவரை சட்டசபை மாற்றத்தை தடை செய்ய வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்..
பார்க்கலாம் நீதிமன்றம் என்ன சொல்கிறதென்று.. அம்மா அரசின் மீதான முதல் வழக்கில் சாதகமான முடிவா, பாதகமான முடிவா என்று..
அன்புடன்
வேலவன்
Monday, May 16, 2011
தி மு க வே இம்முறை வென்றது..
மசாலா திரைப்படத்தின் அம்சங்களுடன், எதிர்பாராத க்ளைமாக்ஸ்சுடன் இனிதே முடிவடைந்துவிட்டது தமிழக தேர்தல் திரைப்படம்.. ஜனநாயகத்தின் எஜமானர்கள் இந்த முறை பணநாயகத்துக்கு முன்னுரிமை தராமல் வாக்களித்து இருப்பது மிகப்பெரிய ஆறுதல்.
ஒரு மாத காலம் ரகசியத்தை அடைகாத்து அமைதியாக உறங்கிக்கொண்டிருக்க வாக்குபெட்டிகள் திறக்கப்பட்டபோது அனைவரையும் வாய் பிளக்க செய்தது. அனைத்துவிதமான கணிப்புகளையும் பொய்யாக்கி புரட்டிபோட்டுள்ளது மக்கள் தீர்ப்பு.
வெற்றி பெற்ற அம்மா மிகுந்த சந்தோஷதுடம் பதவி ஏற்றுவிட்டார்
,தோல்வி அடைந்த கலைஞர் "மக்கள் அளித்த ஓய்வு" என்று ஒற்றை வரியில் முடித்துக்கொண்டார். பொது ஜனம் வாக்களித்துவிட்டோம், ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன என்று அவர்களின் வயிற்று பிழைப்பை பார்க்க போய்
விட்டார்கள்.. அரசியல் ஆர்வலர்களும் , பதிவர்களும் மட்டுமே எப்படி நடந்தது இது என்று தலையை பிய்த்துக்கொண்டு அவரவர் ஒரு கருத்தை பதிவு செய்கிறார்கள். அந்த வகையில் என் பதிவு..
இதுவரையில் இப்படி ஒரு அமைதி புரட்சியை என் அனுபவத்தில் பார்த்ததில்லை. 1996 தேர்தலில் அம்மா துடைத்து எறியப்படுவார் என்பது கன்னியாகுமரி முதல் சென்னை வரை பளிச் என்று தெரிந்தது. அந்த தேர்தலில் திமுகவின் வெற்றி எத்துனை வாக்குகள் வித்தியாசத்தில் என்பது மட்டுமே வாக்கு எண்ணிக்கை நாளன்று பார்க்கப்பட்டது .. அதே போல 2001 , 2006 தேர்தல்களிலும் முடிவுகள் பெரும்பான்மையானோர் யுகித்தபடி இருந்தது.. 2011 என்பது தான் உண்மையிலேயே மௌன புரட்சி என்று சொல்லவேண்டும், அந்த வகையில் தமிழக வாக்காளர்கள் விவரமானவர்கள் , சில சமயம் அதிகார, பண நாயகத்துக்கு சறுக்கினாலும் மீண்டும் சுதாரித்து எழுந்து விட்டார்கள்.
என்னை பொறுத்தவரையில் இது திமுகவின் வெற்றி என்றே சொல்லுவேன். ஏன் என்று கடைசியில் சொல்கிறேன். அதற்கு முன் கலைஞரிடம் சில விஷயங்கள்
கலைஞரே , எங்கே சறுக்க ஆரம்பித்தீர்?? மொத்தமாக
எங்கே சறுக்கி அதளபாதாளத்தில் விழுந்தீர் என்று உங்களுக்கே நன்றாக தெரியும்.. அரசியலில் பழுத்த பழம், அரசியல் நெளிவு சுளிவு அத்துப்படியான உங்களுக்கு இது தெரியாமலா இருக்கும்? ஆனாலும் சூழ்நிலை கைதியான நீங்கள் வேறு வழி இன்றி அனைத்துக்கும் சப்பைக்கட்டு கட்டிகொண்டே வந்ததன் விளைவு இந்த "ஓய்வு" .
பத்து , பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கருணாநிதிக்கு அழகிரி என்றொரு மகன், கனிமொழி என்று மகள், ராஜாத்தி என்ற துணைவியார் இருக்கின்றார் என்பதெல்லாம் செவி வழி செய்தியாக மட்டுமே இருந்தது. மீடியாக்களின் ஆதிக்கம் அதிகமில்லாத அந்த காலத்தில் பெரும்பாலனவர்கள் உங்களின் வாரிசுகளை பற்றி பெரிதும் அறிந்திருக்கவில்லை.
எதிர்கட்சிகள் கூட ஸ்டாலின் என்ற ஒற்றை மனிதரை முன்னிறுத்தியே "வாரிசு அரசியல்" என்ற அம்பை உங்கள் மீது எய்து கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் வாரிசு அரசியல் என்பது மக்களால் புறம் தள்ளப்பட்டதுக்கான சாட்சி தான் ஸ்டாலின் பெற்ற வெற்றிகள். கட்சியினரும் ஸ்டாலினை முழுமனதாக ஏற்றுக்கொண்டதும் அவர் தி மு க தலைவரின் மகன் என்ற காரணத்தை காட்டிலும் தி மு க விற்காக இளம் வயதில் இருந்து உழைத்தவர் என்பதே.
ஆனால் , இந்த பத்தாண்டுகளில் தான் வாரிசு அரசியல் தன் அடுத்த பரிமாணத்துக்கு சென்றது , ஆம் குடும்ப அரசியலாக தன்னை நிலைநாட்டியது.. முரசொலி மாறனின் மறைவிற்கு பிறகு தயாநிதி உள்ளே நுழைந்தார் , கனிமொழி , அழகிரி என்று அடுத்தடுத்து வாரிசுகள் உள்ளே நுழைந்த போது தான், திமுகவின் தலைமை மட்டுமே அதிகார மையம் என்றிருந்தது மாறி, தென் மண்டலம் , வட மண்டலம் என்று பிளவுபட்டு நின்றது. தலைவரின் வழி நின்று அமைச்சர்களும், மாவட்ட செயலாளர்களும் தங்களின் பிள்ளைகளையும் அரசியலில் இழுத்துவிட, வட , தென் என்பதையும் தாண்டி குறுநில மன்னர்கள் போல் ஆங்காங்கே அதிகார மையங்கள் தோன்றியது.. இது ஆபத்தில் முடியும் என்று உங்களுக்கு தெரிந்த போதிலும் கேட்க முடியாத சூழ்நிலையில் கைகட்டி மௌனியாகவே வேடிக்கை பார்த்தீர்.
ஸ்டாலின் வருகையை ஆரவாரத்துடன் வரவேற்ற அதே தொண்டன் மற்றவர்களின் ஆக்கிரமிப்பு கண்டு உள்ளேயே புழுங்கினான், தொண்டன் அல்லாத தி மு க அபிமானிகள் முகம் சுளிக்க துவங்கினார். ஒருகட்டத்தில் பின் வாசல் வழியாக கனிமொழிக்கு பதவி வந்த போது உதட்டளவில் சிரித்து , மனதளவில் குமுறிய தொண்டனும், விட்டுக்கொடுக்க கூடாது என்ற ஒரே காரணத்துக்காக அடுத்தவரிடம் ஏதோ சால்ஜாப்பு சொன்ன தி மு க அபிமானிகளும் ஏராளம் ஏராளம். கட்சி சார்ந்த , பொது மற்றும் சில அரசு சார்ந்த விழாக்களின் போஸ்டர்கள், மேடைகளில் ராசத்தியம்மாவும் , தயாளுஅம்மாவும் இடம் பெற்றதுதான் உச்சக்கட்டம். அமைச்சர்கள் பலரும் உங்களை விடவும் உங்களின் மனைவி துனைவிகளிடம் அரசியல்,ஆட்சி, அதிகாரம் பற்றி பேசி காரியம் சாத்திக்க முடியும் என்ற நிலை வந்தபோதாவது நீங்கள் சுதாரித்திருக்க வேண்டும்.
ஸ்டாலின் வருகையை ஏற்றுக்கொண்ட பேராசிரியர் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் கூட அடுத்தடுத்து வந்த அதிகார மையங்களை ரசிக்கவில்லை என்பதும் , அதை பற்றி உங்களுடன் என்ன விதமான கருத்துக்களை சொல்லி இருப்பார்கள் என்பதும் உங்கள் மனசாட்சிக்கு மட்டுமே தெரிந்த உண்மைகள்.
ஸ்டாலின் பற்றிய விமர்சனங்கள் எடுபடவில்லை என்று எதிர்கட்சிகள் அங்கலாய்த்த நேரத்தில் வராது வந்த மாமனிகளாக வந்தவர்கள் தான் தயாநிதி, அழகிரி, கனிமொழி, மனைவி , துணைவி.. கயல்விழி. உங்கள் மீது எறிய எதிர்கட்சிகளின் கைகளில் நெல்லிக்கனி அளவில் இருந்த வாரிசு அரசியல் என்ற கூழங்கல்லை மக்கள், கட்சியினர் வலுக்கட்டாயமாக கிழே போட வைத்த வேளையில் இந்தா பிடி என்று நீங்களாகவே திணித்தது தான் குடும்ப அரசியல் என்ற பாறாங்கல். கூழங்கள் வைத்தே உங்களை பதம் பார்த்தவர்கள் , பாறாங்கல் கிடைத்தால் சும்மா விடுவார்களா??
மீடியாவின் ஆதிக்கம் இல்லாத போது அடங்கி இருந்தவர்கள், மீடியாக்கள் பெரு வளர்ச்சி பெற்ற கால கட்டத்தில் வெளிவந்து போட்ட ஆட்டத்தின் விளைவு தான் உங்கள் குடும்பம் அக்டோபஸ் உருவம் பெற்று வார இதழ் முதல் இணையம் வரை பரவி கிடக்கிறது.
தமிழகத்தை பொறுத்த வரை மீடியா வளர்ச்சிக்கு முக்கிய காரணி உங்கள் குடும்ப தொலைகாட்சி "சன் டிவி" என்றால் மிகையாகது.. அதே மீடியா உங்களின் குடும்ப அரசியலை பட்டவர்த்தனமாக வெளிச்சம் போட்டு கடைகோடி குக்கிராமத்துக்கும் எடுத்து சென்றது தான் கொடுமை.. அதுவும் நீங்கள் கொடுத்த இலவச தொலைக்காட்சியே அதை செவ்வனே செய்ததுதான் கொடுமையிலும் கொடுமை
அதிகார மையம் ஏற்பட்டுவிட்டது சரி.. ஆட்டம் போடாமல் இருந்திருக்கலாம் அல்லவா ??
ஒரு சர்வே மதுரையில் மூன்று உயிர்களை பலிவாங்கியதே. தினகரன் ஊழியர் என்பதால் அவர்கள் தி மு க அபிமானிகளாக இருக்க கூட வாய்ப்பு இருந்தது.. தருமபுரி பஸ் எரிப்பிற்கும் இந்த சம்பவத்திற்கும் என்ன வேறுபாடு? அங்கே இறந்தது பெண்கள், இங்கே இறந்தது ஆண்கள் என்பது தவிர்த்து ?
இந்த துயர சம்பவத்தில் உங்களின் நிலைப்பாடு எப்படி இருந்திருக்க வேண்டும்? "அதுக்குத்தான் அப்போவே சர்வே வேண்டாம் என்று சொன்னேன் , கேட்கவில்லை" என்ற ஒற்றை வரியில் முடிதுக்கொண்டிர்களே .. அதன் விளைவு தான் இன்று "எனக்கு ஓய்வு கொடுத்துவிட்டார்கள் " என்று அதே ஒற்ற வரியில் சொல்ல வைத்திருக்கிறது..
உங்களுக்கு கண்கள் பனித்து நெஞ்சம் இனித்த போது உங்கள் தொண்டர்களுக்கும் , தி மு க அபிமானிகளுக்கும் கண்கள் எரிந்தது , இதயம் வெடித்தது என்ற உண்மையை இப்போதாவது உணருங்கள்.
ஒரே ஒரு டி குடித்துவிட்டு தலைவர்களின் ஆணையேற்று மாடாய் உழைத்தவன் திமுக தொண்டன் என்பது வரலாறு.. ஆனால் இன்று அப்படி அல்ல .. அவனும் சிந்திக்கிறான்.. குடும்ப ஆதிக்கம் என்று எதிர்கட்சிகளும், பொது ஜனமும் சொல்லிடும் போது அவனுக்கும் உண்மை தெரிகிறது.. நியாயமான அயர்ச்சி ஏற்படுகிறது.. விளைவு அவன் முழுமையாக தேர்தல் வேலைகள் செய்வதில்லை..
தேர்தல் முடிந்த பின்பு கூட ஒரு விழாவில் என் குடும்பத்தினர் திரைத்துறையில் வந்தால் மட்டும் சிலருக்கு கசக்கிறது என்று கேள்வி எழுப்பி உள்ளீர்கள். ஏ வி எம் குடும்பம் இல்லையா என்று கேள்வி வேறு.. கலைஞரே, காலம் காலமாக திரை படத்தயாரிப்பிலே ஊறி போன ஏவிம் , தேவர் பிலிம்ஸ் குடும்பத்தில் இருந்து வாரிசுகள் வருவதற்கும், 70 களில் திரைக்கதை வசனம் மட்டுமே எழுதி, சில படங்கள் தயாரித்து , வாங்கி, பின்னர் பொதுவாழ்விலேயே காலம் கழித்து வரும் கருணாநிதியின் குடும்பத்தில் இருந்து வாரிசுகள் ஒன்றன் பின் ஒன்றாக சொல்லிவைத்தார்போல திரைப்படம் தயாரிக்கவும், விநியோம் செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்பது உங்கள் மனதுக்கு தெரியாத ஒன்றா என்ன? வந்துவிட்டார்கள் , அடக்கமுடியவில்லை.. அதனால் ஏதோ சொல்லி சமாளிக்க வேண்டுமே என்று பேசிவிட்டீர்.. அப்படிதானே?
உங்கள் வாரிசுகளின் தயாரிப்பில் முன்னணி நடிகர்கள் நடித்தார்கள்.. ரஜினி கமல் முதல் சூர்யா கார்த்தி விஜய் அஜித் தனுஷ் வரை.. உண்மைதான்.. அது அவர்கள் தொழில், வரும்படி எங்கு வந்தாலும் நடிப்பார்கள்.. கையில் காசு பார்த்ததும் போய் கொண்டே இருப்பார்கள்.. அதுக்காக, ஒட்டுமொத்த திரைதுரையுமே உங்கள் பின்னாலே வந்துவிடும் என்று நீங்கள் நினைத்து விட்டதை தான் ஜீரணிக்க முடியவில்லை.
பாசதலைவனுக்கு பாராட்டு விழாவெல்லாம் அரிதாரம் போட்ட ஒப்பனை முகம் தான் , உள்ளே இருந்த காயங்கள் , தழும்புகள் உங்கள் கண்ணனுக்கு தெரியாமலே மணிகணக்கில் உட்கார்ந்து ரசித்து விட்டு வந்த உங்களை என்ன என்று சொல்வது..
அப்போது கூட புண்ணியவான் அஜித் உங்களுக்கு ஒரு அபாய சங்கை ஊதினார்.. பாசக்கார பயபுள்ளைகள் அடித்த ஜிங்குச்சா சத்தம் நிறைந்திருந்த உங்கள் செவியின் வழியில் அந்த அபாய சங்கு உங்க மூளையை எட்டமுடியாமல் முனங்களோடு திரும்பிவிட்டது.
குடும்ப ஆதிக்கம் பற்றியே பதிவு செய்ய நினைத்தேன், ஆனால் உங்கள் விழ்ச்சிக்கு குடும்ப ஆதிக்கத்துக்கு இணையாக வந்த மற்றொரு காரணம் மின்வெட்டு .. அதை பற்றி சில வரிகள்..
மின்பற்றக்குறை - அமைச்சர்களிலேயே அதிகமாக விமிர்சிக்கபட்டவரும் கேலி செய்யப்பட்டவரும் உங்களின் மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தான். இது ஏதோ இந்த ஆண்டில் மட்டுமல்ல. கடந்த நான்கு ஆண்டுகளாகவே தமிழகத்தை முடக்கி போட்டது. "இருட்டுத்துறை" "மின்வெட்டு" அமைச்சர் என்று வீராசாமிக்கு பெயர் வாங்கி தந்த அளவுக்கு கை மீறி போனது.. நகரம் சம்மரில் அவதிப்பட்டது, கிராமங்கள் வருடத்தில் 10 மாதங்களும் மின்வெட்டில் அவதிப்பட்டது.. வெயில் காலங்களில் மக்கள் காற்று இல்லாமம் புழுங்கிய புழுக்கமும் , அவர்கள் அனுபவித்த அனலும் தான் இப்போது உங்கள் அரசை பொசுக்கிவிட்டது..
மின்வெட்டு விஷயத்தில் எப்போதும் முந்தைய அரசையே குறை சொன்ன நீங்கள் அதற்கு பதில், என்னென்ன செய்திருக்கலாம்? அரசு விழாக்களில் மின் உபயோகத்தை குறைத்திருக்கலாம், பாலங்களை திறக்கும் போது அவை பல நாட்கள் மின் வெள்ளத்தில் சொலிக்க விட்டதை தவிர்த்திருக்கலாம்.. பகல் முழுது தேவையின்றி சாலைகளில் எறிந்த சோடியம் விளக்குகளை நிறுத்த செய்திருக்கலாம். மத்திய தொகுப்பில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் மின்சாரம் வாங்கி இருக்கலாம்.. குறைந்த பட்சம்.. விழாக்களில் / திருமணங்களில் மின் உபயோகத்தை கட்டுப்படுத்த மக்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கலாம் .. அதை எல்லாம் விடுத்து கடைசி வரையிலும் வெறுமனே அதிமுகவை குறை கூறிகொண்டே இருந்தால் போதும் என்று மெத்தனமாக இருந்துவிட்டீர்.. பிரசாரத்தின் போது மின்வெட்டால் பலருக்கு வாகனங்களில் கைக்கூப்பி வந்த தி மு க வேட்பாளர் முகம் கூட தெரியாமல் போனது தான் சாதனை..
சரி மக்களே பொறுமையாக படித்தமைக்கு நன்றி - இப்போ தலைப்பின்படி தி மு க வென்றது.. ஏன்? 2011 - இந்த முறை கலைஞர் வென்றிருந்தால் , அது தி மு க வின் உண்மையான வெற்றி கிடையாது.. அது கலைஞரின் குடும்பத்துக்கு , தி மு க அமைச்சர்களின் குடும்பங்களுக்கு, மாவட்ட செயலாளர் குடும்பங்களுக்கு கிடைத்த வெற்றி மட்டுமே .. ஒரு பத்தாயிரம் குடும்பத்துக்கு கிடைத்த வெற்றி மட்டுமே.
இந்த தோல்வி நிச்சயம் கலைஞரை , தி மு க முன்னணி தலைவர்களை சிந்திக்க வைக்கும்.. தவறுகள் திருத்தப்பட ஒரு வாய்ப்பு.. தி மு க மீண்டும் எழுந்து வர வாய்ப்பாக அமையும்.. திமுக சுயபரிசோதனை செய்ய கிடைத்த பொன்னான காலம். மீண்டும் பழைய வேகத்தோடு எழும் சந்தர்ப்பம். கலைஞர் ஓரளவுக்கு (கூட்டணி ஆட்சி) வென்றிருந்தால் அவருக்கு இது பற்றி சிந்தித்து பார்க்க கூட நேரம் இருந்திருக்காது . கட்சியும் விரைவிலேயே கபளீகரம் செய்யப்பட்டிருக்கும்.
அந்த வகையில் இந்த தோல்வி "திராவிட முன்னேற்ற கழகம்" என்ற ஒரு கட்சிக்கு, அந்த கட்சியின் லட்ச கணக்கான தொண்டர்களுக்கும் , லட்சகணக்கான அபிமானிகளுக்கும் கிடைத்த வெற்றியே.
திமுகவிற்கு இது ஒன்றும் பெரிய இழப்பல்ல.. இதைவிட அதள பாதாளத்தில் இருந்து மீண்டு வந்திருக்கிறது.. பதினான்கு வருடம் கட்சி தோல்வியை மட்டுமே ருசித்த போதும் கட்சியை சிதைந்து போகாது காத்த பெருமை கலைஞருக்கு உண்டு.. அந்த வகையில்,
குடும்ப அரசியல்,அதிகார மையத்தை உடைத்து எறிந்து மக்களாலும் , கட்சியினராலு
ம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஸ்டாலினிடம் பொறுப்பை ஒப்படைத்து , நீங்களும், பேராசிரியர் உள்ளிட்ட தலைவர்கள் பின்னல் இருந்து வழி நடத்தினால்.. 2016 அல்ல, 2014 உங்கள் வசமாகும் என்பதே அனைவரின் ஆசை. அதே நேரத்தில் செய்வீர்களா என்பதே ஓவ்வொரு தொண்டனின்,அபிமானியின் கேள்வியும்,
காலம் பதில் சொல்லட்டும்..
இது என்னளவிலான கருத்து , உங்கள் வாதத்தை கருத்து பெட்டியில் மறக்காமல் சொல்லவும்..
பதிவு பிடித்திருந்தால் ஒரு ஓட்டு போடுங்கள்..
நன்றி
வேலவன்
ஒரு மாத காலம் ரகசியத்தை அடைகாத்து அமைதியாக உறங்கிக்கொண்டிருக்க வாக்குபெட்டிகள் திறக்கப்பட்டபோது அனைவரையும் வாய் பிளக்க செய்தது. அனைத்துவிதமான கணிப்புகளையும் பொய்யாக்கி புரட்டிபோட்டுள்ளது மக்கள் தீர்ப்பு.
வெற்றி பெற்ற அம்மா மிகுந்த சந்தோஷதுடம் பதவி ஏற்றுவிட்டார்
,தோல்வி அடைந்த கலைஞர் "மக்கள் அளித்த ஓய்வு" என்று ஒற்றை வரியில் முடித்துக்கொண்டார். பொது ஜனம் வாக்களித்துவிட்டோம், ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன என்று அவர்களின் வயிற்று பிழைப்பை பார்க்க போய்
விட்டார்கள்.. அரசியல் ஆர்வலர்களும் , பதிவர்களும் மட்டுமே எப்படி நடந்தது இது என்று தலையை பிய்த்துக்கொண்டு அவரவர் ஒரு கருத்தை பதிவு செய்கிறார்கள். அந்த வகையில் என் பதிவு..
இதுவரையில் இப்படி ஒரு அமைதி புரட்சியை என் அனுபவத்தில் பார்த்ததில்லை. 1996 தேர்தலில் அம்மா துடைத்து எறியப்படுவார் என்பது கன்னியாகுமரி முதல் சென்னை வரை பளிச் என்று தெரிந்தது. அந்த தேர்தலில் திமுகவின் வெற்றி எத்துனை வாக்குகள் வித்தியாசத்தில் என்பது மட்டுமே வாக்கு எண்ணிக்கை நாளன்று பார்க்கப்பட்டது .. அதே போல 2001 , 2006 தேர்தல்களிலும் முடிவுகள் பெரும்பான்மையானோர் யுகித்தபடி இருந்தது.. 2011 என்பது தான் உண்மையிலேயே மௌன புரட்சி என்று சொல்லவேண்டும், அந்த வகையில் தமிழக வாக்காளர்கள் விவரமானவர்கள் , சில சமயம் அதிகார, பண நாயகத்துக்கு சறுக்கினாலும் மீண்டும் சுதாரித்து எழுந்து விட்டார்கள்.
என்னை பொறுத்தவரையில் இது திமுகவின் வெற்றி என்றே சொல்லுவேன். ஏன் என்று கடைசியில் சொல்கிறேன். அதற்கு முன் கலைஞரிடம் சில விஷயங்கள்
கலைஞரே , எங்கே சறுக்க ஆரம்பித்தீர்?? மொத்தமாக
எங்கே சறுக்கி அதளபாதாளத்தில் விழுந்தீர் என்று உங்களுக்கே நன்றாக தெரியும்.. அரசியலில் பழுத்த பழம், அரசியல் நெளிவு சுளிவு அத்துப்படியான உங்களுக்கு இது தெரியாமலா இருக்கும்? ஆனாலும் சூழ்நிலை கைதியான நீங்கள் வேறு வழி இன்றி அனைத்துக்கும் சப்பைக்கட்டு கட்டிகொண்டே வந்ததன் விளைவு இந்த "ஓய்வு" .பத்து , பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கருணாநிதிக்கு அழகிரி என்றொரு மகன், கனிமொழி என்று மகள், ராஜாத்தி என்ற துணைவியார் இருக்கின்றார் என்பதெல்லாம் செவி வழி செய்தியாக மட்டுமே இருந்தது. மீடியாக்களின் ஆதிக்கம் அதிகமில்லாத அந்த காலத்தில் பெரும்பாலனவர்கள் உங்களின் வாரிசுகளை பற்றி பெரிதும் அறிந்திருக்கவில்லை.
எதிர்கட்சிகள் கூட ஸ்டாலின் என்ற ஒற்றை மனிதரை முன்னிறுத்தியே "வாரிசு அரசியல்" என்ற அம்பை உங்கள் மீது எய்து கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் வாரிசு அரசியல் என்பது மக்களால் புறம் தள்ளப்பட்டதுக்கான சாட்சி தான் ஸ்டாலின் பெற்ற வெற்றிகள். கட்சியினரும் ஸ்டாலினை முழுமனதாக ஏற்றுக்கொண்டதும் அவர் தி மு க தலைவரின் மகன் என்ற காரணத்தை காட்டிலும் தி மு க விற்காக இளம் வயதில் இருந்து உழைத்தவர் என்பதே.
ஆனால் , இந்த பத்தாண்டுகளில் தான் வாரிசு அரசியல் தன் அடுத்த பரிமாணத்துக்கு சென்றது , ஆம் குடும்ப அரசியலாக தன்னை நிலைநாட்டியது.. முரசொலி மாறனின் மறைவிற்கு பிறகு தயாநிதி உள்ளே நுழைந்தார் , கனிமொழி , அழகிரி என்று அடுத்தடுத்து வாரிசுகள் உள்ளே நுழைந்த போது தான், திமுகவின் தலைமை மட்டுமே அதிகார மையம் என்றிருந்தது மாறி, தென் மண்டலம் , வட மண்டலம் என்று பிளவுபட்டு நின்றது. தலைவரின் வழி நின்று அமைச்சர்களும், மாவட்ட செயலாளர்களும் தங்களின் பிள்ளைகளையும் அரசியலில் இழுத்துவிட, வட , தென் என்பதையும் தாண்டி குறுநில மன்னர்கள் போல் ஆங்காங்கே அதிகார மையங்கள் தோன்றியது.. இது ஆபத்தில் முடியும் என்று உங்களுக்கு தெரிந்த போதிலும் கேட்க முடியாத சூழ்நிலையில் கைகட்டி மௌனியாகவே வேடிக்கை பார்த்தீர்.
ஸ்டாலின் வருகையை ஆரவாரத்துடன் வரவேற்ற அதே தொண்டன் மற்றவர்களின் ஆக்கிரமிப்பு கண்டு உள்ளேயே புழுங்கினான், தொண்டன் அல்லாத தி மு க அபிமானிகள் முகம் சுளிக்க துவங்கினார். ஒருகட்டத்தில் பின் வாசல் வழியாக கனிமொழிக்கு பதவி வந்த போது உதட்டளவில் சிரித்து , மனதளவில் குமுறிய தொண்டனும், விட்டுக்கொடுக்க கூடாது என்ற ஒரே காரணத்துக்காக அடுத்தவரிடம் ஏதோ சால்ஜாப்பு சொன்ன தி மு க அபிமானிகளும் ஏராளம் ஏராளம். கட்சி சார்ந்த , பொது மற்றும் சில அரசு சார்ந்த விழாக்களின் போஸ்டர்கள், மேடைகளில் ராசத்தியம்மாவும் , தயாளுஅம்மாவும் இடம் பெற்றதுதான் உச்சக்கட்டம். அமைச்சர்கள் பலரும் உங்களை விடவும் உங்களின் மனைவி துனைவிகளிடம் அரசியல்,ஆட்சி, அதிகாரம் பற்றி பேசி காரியம் சாத்திக்க முடியும் என்ற நிலை வந்தபோதாவது நீங்கள் சுதாரித்திருக்க வேண்டும்.
ஸ்டாலின் வருகையை ஏற்றுக்கொண்ட பேராசிரியர் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் கூட அடுத்தடுத்து வந்த அதிகார மையங்களை ரசிக்கவில்லை என்பதும் , அதை பற்றி உங்களுடன் என்ன விதமான கருத்துக்களை சொல்லி இருப்பார்கள் என்பதும் உங்கள் மனசாட்சிக்கு மட்டுமே தெரிந்த உண்மைகள்.
ஸ்டாலின் பற்றிய விமர்சனங்கள் எடுபடவில்லை என்று எதிர்கட்சிகள் அங்கலாய்த்த நேரத்தில் வராது வந்த மாமனிகளாக வந்தவர்கள் தான் தயாநிதி, அழகிரி, கனிமொழி, மனைவி , துணைவி.. கயல்விழி. உங்கள் மீது எறிய எதிர்கட்சிகளின் கைகளில் நெல்லிக்கனி அளவில் இருந்த வாரிசு அரசியல் என்ற கூழங்கல்லை மக்கள், கட்சியினர் வலுக்கட்டாயமாக கிழே போட வைத்த வேளையில் இந்தா பிடி என்று நீங்களாகவே திணித்தது தான் குடும்ப அரசியல் என்ற பாறாங்கல். கூழங்கள் வைத்தே உங்களை பதம் பார்த்தவர்கள் , பாறாங்கல் கிடைத்தால் சும்மா விடுவார்களா??

மீடியாவின் ஆதிக்கம் இல்லாத போது அடங்கி இருந்தவர்கள், மீடியாக்கள் பெரு வளர்ச்சி பெற்ற கால கட்டத்தில் வெளிவந்து போட்ட ஆட்டத்தின் விளைவு தான் உங்கள் குடும்பம் அக்டோபஸ் உருவம் பெற்று வார இதழ் முதல் இணையம் வரை பரவி கிடக்கிறது.
தமிழகத்தை பொறுத்த வரை மீடியா வளர்ச்சிக்கு முக்கிய காரணி உங்கள் குடும்ப தொலைகாட்சி "சன் டிவி" என்றால் மிகையாகது.. அதே மீடியா உங்களின் குடும்ப அரசியலை பட்டவர்த்தனமாக வெளிச்சம் போட்டு கடைகோடி குக்கிராமத்துக்கும் எடுத்து சென்றது தான் கொடுமை.. அதுவும் நீங்கள் கொடுத்த இலவச தொலைக்காட்சியே அதை செவ்வனே செய்ததுதான் கொடுமையிலும் கொடுமை
அதிகார மையம் ஏற்பட்டுவிட்டது சரி.. ஆட்டம் போடாமல் இருந்திருக்கலாம் அல்லவா ??
ஒரு சர்வே மதுரையில் மூன்று உயிர்களை பலிவாங்கியதே. தினகரன் ஊழியர் என்பதால் அவர்கள் தி மு க அபிமானிகளாக இருக்க கூட வாய்ப்பு இருந்தது.. தருமபுரி பஸ் எரிப்பிற்கும் இந்த சம்பவத்திற்கும் என்ன வேறுபாடு? அங்கே இறந்தது பெண்கள், இங்கே இறந்தது ஆண்கள் என்பது தவிர்த்து ?
இந்த துயர சம்பவத்தில் உங்களின் நிலைப்பாடு எப்படி இருந்திருக்க வேண்டும்? "அதுக்குத்தான் அப்போவே சர்வே வேண்டாம் என்று சொன்னேன் , கேட்கவில்லை" என்ற ஒற்றை வரியில் முடிதுக்கொண்டிர்களே .. அதன் விளைவு தான் இன்று "எனக்கு ஓய்வு கொடுத்துவிட்டார்கள் " என்று அதே ஒற்ற வரியில் சொல்ல வைத்திருக்கிறது..
உங்களுக்கு கண்கள் பனித்து நெஞ்சம் இனித்த போது உங்கள் தொண்டர்களுக்கும் , தி மு க அபிமானிகளுக்கும் கண்கள் எரிந்தது , இதயம் வெடித்தது என்ற உண்மையை இப்போதாவது உணருங்கள்.
ஒரே ஒரு டி குடித்துவிட்டு தலைவர்களின் ஆணையேற்று மாடாய் உழைத்தவன் திமுக தொண்டன் என்பது வரலாறு.. ஆனால் இன்று அப்படி அல்ல .. அவனும் சிந்திக்கிறான்.. குடும்ப ஆதிக்கம் என்று எதிர்கட்சிகளும், பொது ஜனமும் சொல்லிடும் போது அவனுக்கும் உண்மை தெரிகிறது.. நியாயமான அயர்ச்சி ஏற்படுகிறது.. விளைவு அவன் முழுமையாக தேர்தல் வேலைகள் செய்வதில்லை..
தேர்தல் முடிந்த பின்பு கூட ஒரு விழாவில் என் குடும்பத்தினர் திரைத்துறையில் வந்தால் மட்டும் சிலருக்கு கசக்கிறது என்று கேள்வி எழுப்பி உள்ளீர்கள். ஏ வி எம் குடும்பம் இல்லையா என்று கேள்வி வேறு.. கலைஞரே, காலம் காலமாக திரை படத்தயாரிப்பிலே ஊறி போன ஏவிம் , தேவர் பிலிம்ஸ் குடும்பத்தில் இருந்து வாரிசுகள் வருவதற்கும், 70 களில் திரைக்கதை வசனம் மட்டுமே எழுதி, சில படங்கள் தயாரித்து , வாங்கி, பின்னர் பொதுவாழ்விலேயே காலம் கழித்து வரும் கருணாநிதியின் குடும்பத்தில் இருந்து வாரிசுகள் ஒன்றன் பின் ஒன்றாக சொல்லிவைத்தார்போல திரைப்படம் தயாரிக்கவும், விநியோம் செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்பது உங்கள் மனதுக்கு தெரியாத ஒன்றா என்ன? வந்துவிட்டார்கள் , அடக்கமுடியவில்லை.. அதனால் ஏதோ சொல்லி சமாளிக்க வேண்டுமே என்று பேசிவிட்டீர்.. அப்படிதானே?
உங்கள் வாரிசுகளின் தயாரிப்பில் முன்னணி நடிகர்கள் நடித்தார்கள்.. ரஜினி கமல் முதல் சூர்யா கார்த்தி விஜய் அஜித் தனுஷ் வரை.. உண்மைதான்.. அது அவர்கள் தொழில், வரும்படி எங்கு வந்தாலும் நடிப்பார்கள்.. கையில் காசு பார்த்ததும் போய் கொண்டே இருப்பார்கள்.. அதுக்காக, ஒட்டுமொத்த திரைதுரையுமே உங்கள் பின்னாலே வந்துவிடும் என்று நீங்கள் நினைத்து விட்டதை தான் ஜீரணிக்க முடியவில்லை.
பாசதலைவனுக்கு பாராட்டு விழாவெல்லாம் அரிதாரம் போட்ட ஒப்பனை முகம் தான் , உள்ளே இருந்த காயங்கள் , தழும்புகள் உங்கள் கண்ணனுக்கு தெரியாமலே மணிகணக்கில் உட்கார்ந்து ரசித்து விட்டு வந்த உங்களை என்ன என்று சொல்வது..
அப்போது கூட புண்ணியவான் அஜித் உங்களுக்கு ஒரு அபாய சங்கை ஊதினார்.. பாசக்கார பயபுள்ளைகள் அடித்த ஜிங்குச்சா சத்தம் நிறைந்திருந்த உங்கள் செவியின் வழியில் அந்த அபாய சங்கு உங்க மூளையை எட்டமுடியாமல் முனங்களோடு திரும்பிவிட்டது.
குடும்ப ஆதிக்கம் பற்றியே பதிவு செய்ய நினைத்தேன், ஆனால் உங்கள் விழ்ச்சிக்கு குடும்ப ஆதிக்கத்துக்கு இணையாக வந்த மற்றொரு காரணம் மின்வெட்டு .. அதை பற்றி சில வரிகள்..
மின்பற்றக்குறை - அமைச்சர்களிலேயே அதிகமாக விமிர்சிக்கபட்டவரும் கேலி செய்யப்பட்டவரும் உங்களின் மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தான். இது ஏதோ இந்த ஆண்டில் மட்டுமல்ல. கடந்த நான்கு ஆண்டுகளாகவே தமிழகத்தை முடக்கி போட்டது. "இருட்டுத்துறை" "மின்வெட்டு" அமைச்சர் என்று வீராசாமிக்கு பெயர் வாங்கி தந்த அளவுக்கு கை மீறி போனது.. நகரம் சம்மரில் அவதிப்பட்டது, கிராமங்கள் வருடத்தில் 10 மாதங்களும் மின்வெட்டில் அவதிப்பட்டது.. வெயில் காலங்களில் மக்கள் காற்று இல்லாமம் புழுங்கிய புழுக்கமும் , அவர்கள் அனுபவித்த அனலும் தான் இப்போது உங்கள் அரசை பொசுக்கிவிட்டது..
மின்வெட்டு விஷயத்தில் எப்போதும் முந்தைய அரசையே குறை சொன்ன நீங்கள் அதற்கு பதில், என்னென்ன செய்திருக்கலாம்? அரசு விழாக்களில் மின் உபயோகத்தை குறைத்திருக்கலாம், பாலங்களை திறக்கும் போது அவை பல நாட்கள் மின் வெள்ளத்தில் சொலிக்க விட்டதை தவிர்த்திருக்கலாம்.. பகல் முழுது தேவையின்றி சாலைகளில் எறிந்த சோடியம் விளக்குகளை நிறுத்த செய்திருக்கலாம். மத்திய தொகுப்பில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் மின்சாரம் வாங்கி இருக்கலாம்.. குறைந்த பட்சம்.. விழாக்களில் / திருமணங்களில் மின் உபயோகத்தை கட்டுப்படுத்த மக்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கலாம் .. அதை எல்லாம் விடுத்து கடைசி வரையிலும் வெறுமனே அதிமுகவை குறை கூறிகொண்டே இருந்தால் போதும் என்று மெத்தனமாக இருந்துவிட்டீர்.. பிரசாரத்தின் போது மின்வெட்டால் பலருக்கு வாகனங்களில் கைக்கூப்பி வந்த தி மு க வேட்பாளர் முகம் கூட தெரியாமல் போனது தான் சாதனை..
சரி மக்களே பொறுமையாக படித்தமைக்கு நன்றி - இப்போ தலைப்பின்படி தி மு க வென்றது.. ஏன்? 2011 - இந்த முறை கலைஞர் வென்றிருந்தால் , அது தி மு க வின் உண்மையான வெற்றி கிடையாது.. அது கலைஞரின் குடும்பத்துக்கு , தி மு க அமைச்சர்களின் குடும்பங்களுக்கு, மாவட்ட செயலாளர் குடும்பங்களுக்கு கிடைத்த வெற்றி மட்டுமே .. ஒரு பத்தாயிரம் குடும்பத்துக்கு கிடைத்த வெற்றி மட்டுமே.
இந்த தோல்வி நிச்சயம் கலைஞரை , தி மு க முன்னணி தலைவர்களை சிந்திக்க வைக்கும்.. தவறுகள் திருத்தப்பட ஒரு வாய்ப்பு.. தி மு க மீண்டும் எழுந்து வர வாய்ப்பாக அமையும்.. திமுக சுயபரிசோதனை செய்ய கிடைத்த பொன்னான காலம். மீண்டும் பழைய வேகத்தோடு எழும் சந்தர்ப்பம். கலைஞர் ஓரளவுக்கு (கூட்டணி ஆட்சி) வென்றிருந்தால் அவருக்கு இது பற்றி சிந்தித்து பார்க்க கூட நேரம் இருந்திருக்காது . கட்சியும் விரைவிலேயே கபளீகரம் செய்யப்பட்டிருக்கும்.
அந்த வகையில் இந்த தோல்வி "திராவிட முன்னேற்ற கழகம்" என்ற ஒரு கட்சிக்கு, அந்த கட்சியின் லட்ச கணக்கான தொண்டர்களுக்கும் , லட்சகணக்கான அபிமானிகளுக்கும் கிடைத்த வெற்றியே.
திமுகவிற்கு இது ஒன்றும் பெரிய இழப்பல்ல.. இதைவிட அதள பாதாளத்தில் இருந்து மீண்டு வந்திருக்கிறது.. பதினான்கு வருடம் கட்சி தோல்வியை மட்டுமே ருசித்த போதும் கட்சியை சிதைந்து போகாது காத்த பெருமை கலைஞருக்கு உண்டு.. அந்த வகையில்,
குடும்ப அரசியல்,அதிகார மையத்தை உடைத்து எறிந்து மக்களாலும் , கட்சியினராலு
ம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஸ்டாலினிடம் பொறுப்பை ஒப்படைத்து , நீங்களும், பேராசிரியர் உள்ளிட்ட தலைவர்கள் பின்னல் இருந்து வழி நடத்தினால்.. 2016 அல்ல, 2014 உங்கள் வசமாகும் என்பதே அனைவரின் ஆசை. அதே நேரத்தில் செய்வீர்களா என்பதே ஓவ்வொரு தொண்டனின்,அபிமானியின் கேள்வியும்,காலம் பதில் சொல்லட்டும்..
இது என்னளவிலான கருத்து , உங்கள் வாதத்தை கருத்து பெட்டியில் மறக்காமல் சொல்லவும்..
பதிவு பிடித்திருந்தால் ஒரு ஓட்டு போடுங்கள்..
நன்றி
வேலவன்
Subscribe to:
Posts (Atom)